தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு
மலர்ந்தொளிரும்
தைத் திங்கள்
முதல்நாள்
2041
தமிழ்ப்
புத்தாண்டு
பிறக்கின்றது.
அதனை முன்னிட்டு
உலகத்
தமிழர்கள்
அனைவருக்கும்
"தமிழ்ப்
புத்தாண்டு
வாழ்த்துகள்"
கூறும்
அதேவேளையில்,
இந்தத்
தமிழ்ப்
புத்தாண்டு
தொடர்பான
வரலாற்றினைத்
திரும்பிப்
பார்க்க
அன்போடு
அழைக்கிறேன்.
கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.
இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு முன்பாக.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.
இதற்கும்
முன்பாக... ![[tamil055.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1fK5d6rsHtytdbwGjpgI5HuPm1imFR4ssOdax6fAVH_bj70hdmtn8rqK7eaJfmdO9J5OXJhU5m9jqMlLuNQ8fVstCZw0376_C9kR2GDtwmhyphenhyphenNWH9LJpMvor0CywcxE4Hpxu6-Kyq2-1rM/s1600/tamil055.jpg)
![[tamil055.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1fK5d6rsHtytdbwGjpgI5HuPm1imFR4ssOdax6fAVH_bj70hdmtn8rqK7eaJfmdO9J5OXJhU5m9jqMlLuNQ8fVstCZw0376_C9kR2GDtwmhyphenhyphenNWH9LJpMvor0CywcxE4Hpxu6-Kyq2-1rM/s1600/tamil055.jpg)
1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.
1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.
தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.
அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.
இதற்கெல்லாம் முன்பாக...
தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.
"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்
தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.
"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்
தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.
மேற்சொன்ன
அனைத்துக்கும்
மேலாக...
உலகத்தில் இயற்கை
என்று ஒன்று
இருக்கின்றது. அது
இயங்கிக்கொண்டே இருக்கிறது.
இயற்கையின் இயக்கத்திற்கு
ஏற்பவே உலகத்தின்
அனைத்து நடப்புகளும்
அமைகின்றன. அந்தவகையில்,
இயற்கைக்கும் தைப்
பிறப்பிற்கும் நெருங்கிய
தொடர்பு உள்ளது. தைத்திங்கள்
அதாவது
சுறவ மாதம்
முதல்
நாளில்
சூரியன்
வடதிசை
நோக்கி
தன்னுடைய
பயணத்தைத்
(அயணம்)
தொடங்குகிறது.) இதனைத்
தமிழில் வடசெலவு
எனவும் வடமொழியில்
உத்தராயணம் என்றும்
கூறுவர்.
ஆக, சூரியன்
வடதிசை நோக்கிப்
புறப்படும் புதிய
பயணத்தைத் தொடங்கும்
நாளில் தமிழர்கள்
பொங்கல் வைப்பதும்
அதனைச் சூரியப்
பொங்கல் என்று
வழங்குவதும் மிகப்
பொருந்த அமைந்துள்ளன.
ஆகவே, இதனைத்
தமிழர்கள் ஆண்டுத்
தொடக்கமாகக் கொண்டது
இயற்கையின் சட்டத்திற்கும்
உட்பட்டு இருப்பது
கவனிக்கத்தக்கது.
இத்தனைக்கும்
இடையில்...
ஆதியிலிருந்து தைத்
திங்களையே தமிழ்ப்
புத்தாண்டாக இருந்தாலும்,
இடைக்காலத்தில் சித்திரையில்
தமிழ்ப் புத்தாண்டு
தொடங்கிய மரபும்
தமிழரிடையே இருந்துள்ளது.
கி.மு
317ஆம் ஆண்டுக்குப்
பின்னர் சித்திரை
முதல்நாள் தமிழ்ப்
புத்தாண்டாக உருவாகியது.
சித்திரைப் புத்தாண்டுக்
கணக்கும் தமிழருக்கு
உரியதே.
பிற்காலச் சோழர்
காலத்தில் சித்திரைப்
புத்தாண்டுக்குப் பெரும்
செல்வாக்கு ஏற்பட்டது.
இதற்குக் காரணம்,
சோழநாட்டில் தமிழியத்தின்
தலைமை கொஞ்சங்
கொஞ்சமாக மாறியும்
மறுவியும் திரிந்தும்போய்
ஆரியப் பார்ப்பனியம்
தலையெடுக்கத் தொடங்கியதுதான்.
இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.
இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர்
காலத்தில், அதாவது
கி.மு
5ஆம் நூற்றாண்டுக்கும்
கி.மு.7ஆம்
நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட
காலத்தில் ஆவணி
முதல்நாளில் தமிழ்ப்
புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது.
தொடிதோட் செம்பியன்
எனும் முசுகுந்த
சோழன் என்ற
மன்னன் ஆட்சிக்காலத்தில்
ஆவணிப் புத்தாண்டுக்குப்
முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக
மணிமேகலைக் காப்பியம்
தெரிவிக்கின்றது.
முடிவும்
விடிவும்
இதுதான்!
ஓர் இடைக்கால
மாற்றம் என்பதாலும்,
ஆரிய வலைக்குள்
சிக்கிக் கொண்டதாலும்,
மீட்க முடியாத
அளவுக்குக் கலப்படம்
நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக்
கூறுகளும் மத
ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக
நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத்
தமிழ்ப் புத்தாண்டாக
ஏற்கமுடியாது என
1921இல் 500 தமிழறிஞர்கள்
எடுத்த முடிவு
முற்றிலும் சரியானதே
என்பதை ஆய்வுப்பார்வையும்
அறிவுநோக்கும் கொண்ட
எவரும் ஒப்புவர். அதுபோலவே
ஆவணிப் புத்தாண்டும்
வழக்கற்றுப் போனதோடு
காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.
இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக , தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!
இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக , தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!
உலகின்
பழமையான
இனமாகிய
தமிழினம்
தலைநிமிர்ந்து
வாழ வேண்டுமானால்,
தமிழரின்
வாழ்வியல்
தமிழியலைச்
சார்ந்திருக்க
வேண்டும்;
தமிழியத்தின்
விழுமியங்களைத்
தாங்கியிருக்க
வேண்டும்;
தமிழிய
மரபுவேர்களில்
எழுந்துநிற்க வேண்டும்.
இந்த முடிவொன்றே
தமிழருக்கு
விடிவாக
அமையும்.
தமிழ்ப்
புத்தாண்டு வரலாறு
![[vaniyal.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6LV4qE7HnNBLx1mZG9C00HieqZJem4FeBKHYyWnPsxnY9ZsIXU-UKx6fd6DB3VUWfZ_Yp7ya-qQCiJ7gdWJOIR4FKwNu_2UOX9Dn38WlUH_hr1_itrLouk8NGAXK4J3DYUiyY9BjXuXt4/s1600/vaniyal.jpg)
முன்னுரை
- ஆங்கில
ஆண்டின்
வரலாறு
தமிழ்ப்
புத்தாண்டு தொடர்பான
விவாதங்கள் கடந்த
ஒரு நூற்றாண்டுக்கும்
மேலாகத் தொடர்ந்து
கொண்டே இருக்கிறது.
இவ்வாண்டின் தொடக்கத்தில்
தமிழக முதல்
'தை முதல்
நாளே தமிழ்ப்
புத்தாண்டு' என்று
அரசாணை பிறப்பித்தார்.
அதன்பிறகு, காலங்காலமாக
சித்திரையில் தமிழ்ப்
புத்தாண்டைக் கொண்டாடிவரும்
உலகமெங்கும் உள்ள
தமிழ் மக்களிடையே
பல்வேறு ஐயங்களும்
குழப்பங்களும் சலசலப்புகளும்
தோன்றின. சித்திரையை
ஒதுக்கவும் முடியாமல்
தைத்திங்களை ஏற்கவும்
முடியாமல் தமிழ்
மக்கள் இன்னும்
தினறிக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில், தமிழ்ப்
புத்தாண்டு எது?
ஏன்? எப்படி?
ஆராய்வோம் வாரீர்.
மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.
கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.
உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.
அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.
அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
தமிழர்
கண்ட கால
அளவீடு
பழந்
தமிழகத்தில் ஆண்டுத்
தொடக்கம் தை
மாதமாக இருந்தது.
பின்னர் ஆவணி
ஆண்டின் முதல்
மாதமாகக் கொள்ளப்பட்டது.
பின்பு சித்திரை
ஆண்டின் முதல்
மாதமாக மாற்றப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.
திங்களின்
வளர்பிறை தேய்பிறை
கொண்டே தமிழர்கள்;
ஆண்டைக் கணித்தனர்.
அதனால்தான் மாதத்தை
திங்கள் என்று
அழைத்தனர். திங்கள்
ஞாயிற்றைச் சுற்றிவர
எடுக்கும் நேரம்
27 நாட்கள், 7 மணி,
43 மணித்துளிகள்.
பண்டைய
நாட்களில் காலத்தைப்
பெரும்பொழுது சிறுபொழுது
என வகுத்தனர்.
இளவேனில் (சித்திரை,
வைகாசி ) முதுவேனில்
(ஆனி, ஆடி),
கார் (ஆவணி,
புரட்டாதி) கூதிர்
(ஐப்பசி, கார்த்திகை)
முன்பனி ( மார்கழி,
தை, ) பின்பனி
( மாசி, பங்குனி)
ஆறு பெரும்
பொழுதாகும்.
வைகறை,
காலை, நண்பகல்,
ஏற்பாடு, மாலை.
யாமம் என்பதே
ஒரு நாளில்
அடங்கிய ஆறு
சிறுபொழுதாகும். மேலும்
ஒரு நாள்
60 நாளிகை கொண்டது
என்று கணக்கிட்டனர்.
ஒரு நாளிகை
24 நிமிடங்களாகும்.
சங்க
காலத் தமிழ்
இலக்கண, இலக்கியங்கள்
காலத்தை நொடி,
நாழிகை, நாள்,
கிழமை, திங்கள்,
ஆண்டு, ஊழி
என்று வானியல்
அடிப்படையில் வரையறை
செய்துள்ளன. முழுமதி
நாளில் ஞாயிறும்
திங்களும் எதிர்
எதிராக நிற்கும்
என்ற வானவியல்
உண்மையைப் புறநானூற்றுப்
பாடல் (65) ஒன்று
தெரிவிக்கிறது.
சங்க
இலக்கியங்களில் தமிழ்
மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன.
தை, மாசி
(பதிற்றுப்பத்து) பங்குனி
(புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் தொல்காப்பிய
ஆசிரியர் இகரவீற்றுப்
புணர்ச்சி, ஐகாரவீற்றுப்
புணர்ச்சியை விளக்கும்போது'திங்களும்
நாளும்
முந்து
கிளந்தன்ன' எனக்
கூறுவதைக் காணலாம்.
எல்லாத் திங்கள்களின்
பெயர்களும் இந்த
இரண்டு எழுத்தில்
(இ, ஐ) முடிந்தன
என்கிறார்."நாள்முன்
தோன்றும்
தொழில்நிலைக்
கிளவி" எனும்
பாடல் நாள்மீன்(நட்சத்திரம்)
பற்றி பேசுகிறது. "திங்கள்
முன்வரின்
இக்கே
சாரியை" என்ற
பாடல்வரி மாதத்தைப்
பற்றியது. எனவே
இன்றுள்ள 12 மாதங்களும்
அவர் காலத்தில்
இருந்து வருகின்றன
எனத் துணியலாம்.
மேலும்
தொல்காப்பியர் அ,இ,உ,எ,
ஒ என்னும் ஐந்து
உயிர் எழுத்துக்களும்
ஒரு மாத்திரை
ஒலிக்கும் குறில்
எழுத்துக்கள் என்கிறார்.
ஆ, ஈ, ஊ,
ஏ, ஐ, ஒ,
ஒள என்னும்
ஏழு உயிர்
எழுத்துக்களும் இரண்டு
மாத்திரை ஒலிக்கும்
நெடில் எழுத்துக்கள்.
மூன்று மாத்திரைகளில்
எந்த எழுத்தும்
ஒலிக்கப்படுவதில்லை. ஒலி
மிகுதல் தேவைப்பட்டால்
அந்தளவிற்குத் தேவையான
எழுத்து ஒலிகளை
எழுப்புதுல் வேண்டும்.
இதே
போல் மெய்
எழுத்துக்கு ஒலி
அரை மாத்திரை.
மாத்திரையின் கால
அளவைச் சொல்லும்போது
இயல்பாகக் கண்
இமைத்தலும், விரல்
நொடித்தலுமே ஒரு
மாத்திரை என்னும்
ஒலி அளவு.
இது தெளிவாக
அறிந்தோர் வழி
என்கிறார் தொல்காப்பியர்.
"கண்இமை
நொடிஎன
அவ்வே
மாத்திரை
நுண்ணிதின்
உணர்ந்தோர்
கண்ட வாறே"
(தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.
தைத்திங்கள்
முதல்
நாளே தமிழ்ப்புத்தாண்டு
ஆண்டுகள்
வரலாற்றைத் தொடர்ச்சியாக
பதிவு செய்யப்
பயன்பட வேண்டும்.
அவை குழப்பத்திற்கு
இடமின்றி இருத்தல்
வேண்டும். தமிழர்
வரலாற்றில் காலக்
குழப்பம் இருப்பதற்கு
தொடராண்டு முறை
இல்லாதது முக்கிய
காரணமாகும்.
பழந்தமிழரிடையே
வியாழ ஆண்டு
என்கிற அறுபதாண்டு
கணக்குமுறை இருந்துவந்துள்ளது
என்பதை வரலாற்றில்
அறிய முடிகிறது.
இந்த அறுபதாண்டு
கணக்குமுறையை பின்னாளில்
ஆரியர்கள் தங்கள்
கையகப்படுத்திக் கொண்டு
ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும்
சமற்கிருதப் பெயர்களைச்
சூட்டி, காலப்போக்கில்
தமிழரின் ஆண்டு
முறையையும் வானியல்
கலையையும் ஐந்திற
அறிவையும் அழித்து
ஒழித்தனர். தமிழரிடையே
தொடராண்டு முறை
இல்லாமல் போனதால்
இன்று நாம்
காணுகின்ற பல்வேறு
தாக்குறவுகளும் பின்னடைவுகளும்
தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.
இந்தக்
குழப்பத்தை நீக்க
ஐந்நூறு தமிழ்
அறிஞர்கள், சான்றோர்கள்
மறைமலை அடிகளார்
தலைமையில் 1921 ஆண்டு
சென்னை பச்சையப்பன்
கல்லூரியில் ஒன்றுகூடி
ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர்
பிறந்த ஆண்டை
கி.மு
31 எனக் கொண்டு,
திருவள்ளுவர் பெயரில்
தொடர் ஆண்டை
ஏற்படுத்துவதென முடிவு
செய்தனர். இழந்த
தொன்மைச் சிறப்புக்குரிய
தை முதல்
நாளே தமிழ்ப்
புத்தாண்டின் தொடக்கமென
அவர்கள் அறிவித்தனர்.
சைவம்,
வைணவம், புத்தம்,
சமணம், கிறித்துவம்,
இசுலாம் என
பல்வேறு சமயத்தைத்
தழுயிய அந்த
ஐந்நூறு சான்றோர்கள்
தை முதல்
நாளை தமிழ்ப்
புத்தாண்டாக அறிவித்ததற்குச்
சரியான காரணங்களும்
சான்றுகளும் இருக்க்கின்றன.
தை
முதல் நாள்தான்
தமிழ்ப் புத்தாண்டு
என்பதற்கு ஈராயிரம்
அண்டுகளுக்கும் முற்பட்ட
கழக இலக்கியன்களில்
காணப்பெறும் சான்றுகள்
சில:-
1. "தைஇத்
திங்கள்
தண்கயம்
படியும்"
– நற்றிணை
2. "தைஇத்
திங்கள்
தண்ணிய
தரினும்"
– குறுந்தொகை
3. "தைஇத்
திங்கள்
தண்கயம்
போல்" – புறநாநூறு
4. "தைஇத்
திங்கள்
தண்கயம்
போல" – ஐங்குறுநூறு
5. "தையில்
நீராடி
தவம் தலைப்படுவாயோ"
– கலித்தொகை
தைப்
பிறந்தால் வழி
பிறக்கும், தை
மழை நெய்
மழை முதலான
பழமொழிகள் இன்றும்
தமிழ் மக்கள்
நாவில் இன்றும்
பயின்று வருகின்றன.
இவை வாழையடி
வாழையாக வாய்மொழிச்
சான்றாக அமைந்துள்ளன.
இனி,
தை முதல்
நாளே புத்தாண்டு
என்பதற்குரிய வானவியல்
அடிப்படையிலான காரணத்தை
காண்போம். பூமி
ஒரு முறை
கதிரவனைச் சுற்றிவரும்
காலமே ஓர்
ஆண்டாகும். இச்சுழற்சியில்
ஒருபாதிக் காலம்
கதிரவன் வடதிசை
நோக்கியும் மறுபகுதிக்
காலம் தென்திசை
நோக்கியும் செல்வதாகக்
காணப்படுகிறது. இதனால்
ஓராண்டில் சூரியனின்
பயணம், வடசெலவு
(உத்ராயணம்) என்றும்
தென்செலவு (தட்சனாயணம்)
என்றும் சொல்லப்படும்.
தை முதல்
ஆனி வரை
ஆறு மாதம்
வடசெலவும் ஆடி
முதல் மார்கழி
வரை தென்செலவுமாகும்.
அந்தவகையில், கதிரவன்
வடசெலவைத் தையில்தான்
தொடங்குகிறது. இந்த
வானியல் உண்மையை
அறிந்த பழந்தமிழர்
தைத்திங்களைப் புத்தாண்டாக
வைத்தது மிகவும்
பொருத்தமானதே.
இப்படியும்
இன்னும் பல
அடிப்படை காரணங்களாலும்
தை முதல்
நாளை ஐந்நூறு
தமிழ்ச் சான்றோர்கள்
புத்தாண்டாக அறிவித்தனர்.
தமிழ்நாடு அரசு
அதனை ஏற்றுக்
கொண்டு 1972 முதல்
அரசுப் பயன்பாட்டிலும்
ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி
வருகிறது.
'பத்தன்று
நூறன்று
பன்னூ
றன்று
பல்லாயி
ரத்தாண்டாய்த்
தமிழர்
வாழ்வில்
புத்தாண்டு,
தை முதல்
நாள், பொங்கல்
நன்னாள்''
என்ற
புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன் பாடலும்
தமிழருக்குத் தமிழ்ப்
புத்தாண்டு தை
முதல் நாள்
என்பதைத் தெளிவாக்குகிறது.
தமிழ்
மொழி, இன,
சமய, கலை,
பண்பாடு,
வரலாற்று
மீட்பு
வரிசையில்
பிற இனத்தாரின்
தாகுதலால்,
படையெடுப்பால்,
மறைப்புகளால்,
சூழ்ச்சிகளால்
இடைக்காலத்தில்
சிதைக்கப்பட்ட
தமிழரின்
வானியல்
கலையை
– ஐந்திரக்(சோதிடம்)
கலையை
நாம் மீட்டெடுக்க
வேண்டும்.
அப்போதுதான்
தமிழரின்
செவ்வியல்
நெறியை
நிலைப்படுத்த
முடியும்..
சித்திரைப்
புத்தாண்டு
புராண
வரலாறு
தமிழரின்
ஆண்டு என்ற
பெயரில் இன்று
இருப்பது 60 ஆண்டுகளைக்
கொண்டு சுழன்றுவரும்
ஆண்டு முறைதான.
இதற்கு, விக்கிரம
ஆண்டு, சாலிவாகன
ஆண்டு(சாலிவாகன
சகம்), கலியாண்டு
என்று பல
பெயர்கள் விளங்குகின்றன.
தமிழரின் வியாழ
ஆண்டு முறையாக
60 ஆண்டு சுழற்சி
முறை ஆரியமயமாக
மாறிப்போன பிறகு
அதற்கு தெய்வீகம்
கற்பிக்கப்பட்டது. இறைவனால்
உருவாக்கப்பட்டது என
நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு
செய்யப்பட்டுப் புராணங்களில்
இணைக்கப்பட்டது. மக்களிடையே
செல்வாக்குப் பெற்றிருந்த
கடவுளர்களின் பெயர்களோடு
தொடர்புபடுத்தி மதநூல்களில்
ஏற்றப்பட்டது.
அவ்வகையில்,
புராணக் கதையின்படி
ஒரு காலத்தில்
நாரத முனிவர்
காமம் மேலோங்கி
அலைந்தபோது அவருக்கு
அறுபதினாயிரம் கோபியரோடு
கொஞ்சிக் குலாவும்
கிருஷ்ண பகவான்
நினைவு வந்ததது.
நேராக அவர்
முன் போய்
"'கிருஷ்ணா, சதா
கோபியரோடு கொஞ்சி
இன்பம் அனுபவிக்கும்
தேவனே, எனக்கு
யாராவது ஒரு
கோபியைத் தந்து
எனது காம
இச்சையைத் தீர்த்து
வைக்க வேண்டும்'';
என வேண்டினார்.
அதற்குக்
கிருஷ்ண பரமாத்மா
''நாரதரே, எந்தவொரு
பெண்ணின் மனதில்
நான் இல்லையோ
அந்தப் பெண்ணை
நீ அனுபவித்துக்கொள்''
என ஆறுதல்
மொழி கூறினார்.
ஆண்டவன்
அருள்வாக்கு அருளப்பெற்ற
நாரதர் வீடு
வீடாய் (நாயாய்)
அலைந்தார். அனைத்துப்
பெண்கள் மனதிலும்
கிருஷ்ணனே நீக்கமறக்
குடி கொண்டிருந்தார்.
ஒரு கோபியும்
அதற்கு விதி
விலக்கல்ல. ஏக்கமும்,
ஏமாற்றமும் அடைந்த
நாரதர் மானம்,
வெட்கம் எல்லாவற்றையும்
தொலைத்து விட்டு
மீண்;டும்
கிருஷ்ண பரமாத்மாவிடமே
வந்தார்.
'கிருஷ்ணா! எல்லாக்
கோபியர் மனதிலும்
தாங்களே இருக்கக்
கண்டேன். தேவரீர்
என்னை இவ்விதம்
சோதிக்கலாமா? காம
வேட்கை எனை
வாட்டுகிறது. என்னைப்
பெண்ணாக மாற்றி
நீரே என்னை
அனுபவித்து என்
வேட்கையைப் போக்க
வேண்டும்"' என
வேண்டி நின்றார்.
பரிதாபப்
பட்ட பகவானும்
அவ்விதமே நடப்பதாகக்
கூறி, நாரதரைப்
பெண்ணாக்கி அவரோடு
கலந்து அறுபது
குழந்தைகளைப் பெற்றார்.
அந்த
அறுபது குழந்தைகள்
தான் பிரபவ
முதல் அட்சய
வரையிலான ஆண்டுகள்.
அந்தப் பெயர்கள்
ஒன்றேனும் தமிழ்
அல்ல. அறிவுக்கும்
அறிவியலுக்கும் ஒவ்வாத
இவ்வாண்டு முறை
வரலாற்றுக்கு
உதவாத வகையில்
உள்ளது.
இந்த
அறுபது ஆண்டுகளின்
பெயர்களை ஆத்திரம்
கொள்ளாமல் ஆன்மீகத்
தமிழர்கள் ஆர
அமர அலசிப்
பார்க்க வேண்டும்.
பிரபவ
முதல் அட்சய
வடமொழிப் பெயர்களாவது
தமிழர்கள் பெருமை
கொள்ளத் தக்கவாறு
உள்ளதா என்றால்
அப்படியும் இல்லை.
எடுத்துக் காட்டாக
மூன்றாவது ஆண்டின்
பெயரான ""சுக்கில""
ஆண் விந்தைக்
குறிக்கிறது. இருபத்துமூன்றாவது
ஆண்டான விரோதி
எதிரி என்ற
பொருளைத் தருகிறது.
முப்பத்தெட்டாவது ஆண்டு
குரோதி. இதன்
பொருள் பழிவாங்குபவன்
என்பதாகும். முப்பத்துமூன்றாவது
ஆண்டின் பெயர்
விகாரி. பொருள்
அழகற்றவன், ஐம்பத்து
ஐந்தாவது ஆண்டான
துன்மதி கெட்டபுத்தி
என்று பொருள்.
இப்படிப்பட்ட
அருவருக்கத்தக்க வரலாற்றக்
கொண்டுவந்து தமிழனின்
தலையில் கட்டிவைத்து
இதுதான் தமிழ்ப்
புத்தாண்டு என்று
பறைசாற்றுவதில் உண்மையும்
நேர்மையும் இருப்பதாகத்
தோன்றவில்லை. வரலாற்றில்
மாபெரும் சருக்கல்
ஏற்பட்டிருக்கிறது என்பது
தெள்ளத் தெளிவாக
உள்ளங்கை நெல்லிக்கனிபோல்
தெரிகிறது.
ஆகவே,
காலங்காலமாக அறிவாராய்ச்சி
இன்றி குருட்டுத்தனமாகத்
தமிழர்கள் சித்திரையைப்
புத்தாண்டாகக் கொண்டாடி
வந்திருக்கின்றனர் என்பது
புலப்படுகிறது. இன்று,
நிலைமை அவ்வாறு
இல்லை. தமிழ்ப்
புத்தாண்டு தொடர்பில்
பல்வேறு ஆய்வுகளும்
ஆராய்ச்சிகளும் நடைபெற்று
மறைந்துகிடந்த உண்மைகள்
வெளிப்பட்டுவிட்டன. இனியும்
தமிழ் மக்களை
மடையர்கள் என்று
எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க்
கூட்டம் ஆட்டம்
போடாமல் அடங்கிப்
போவதுதான் நல்லது.
ஆரிய வழிசார்ந்தவர்கள்
தங்களுக்கு எந்த
ஆண்டு வேண்டுமோ
வைத்துக்கொள்ளட்டும்; எந்த
நம்பிக்கை வேண்டுமோ
வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத
மொழி வேண்டுமானால்
வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம்
வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்;
ஆரிய வாழ்க்கை
முறையை வைத்துக்கொள்ளட்டும்.
இவை அனைத்தையும்
அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.
ஆரியக்
கூட்டத்தின்
மூடத்தனங்களை
எந்த நிலையிலும்
– எந்தச்
சூழலிலும்
– எந்த வடிவத்திலும்
– எந்த முறையிலும்
– எந்த ஊடகத்திலும் உலகின்
நனிசிறந்த
இனமாகிய
தமிழ்
இனத்தின் மீது
திணிக்க
வேண்டாம்!
தமிழர்மீது
திணிக்க
வேண்டாம்!
காரணம்,
அவ்வாறு
திணிப்பது
ஆதிக்க
மனப்பான்மை
மட்டுமன்று
மனித உரிமை
மீறல்
என்பதையும்
எவரும்
மறக்கலாகாது.


